
International
oi-Halley Karthik
தெஹ்ரான்: கச்சா எண்ணெய் கப்பல்களின் பாதையான, ஹர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், இந்த பாதை வழியாக 2 எல்பிஜி கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதித்துள்ளது. இதனை ராய்டர்ஸ் செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது.
இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் சிலிண்டர்களை தொடர்ந்து புக் செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில், எல்பிஜி கப்பல்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

ஈரான் மேட்டரில் இந்தியா ஒருதலைப்பட்சமாக நடந்துக்கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டிக்காமல், எதிர் தாக்குதல் நடத்திய ஈரானை கண்டித்தது, ஈரான் உச்ச தலைவர் காமெனி மரணத்திற்கு ஒரு வாரம் கழித்து இரங்கல் சொன்னது என.. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகள் அமெரிக்க சார்பு நிலையை எட்டியிருக்கிறது என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இப்படி இருக்கையில், வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றி வரும் கப்பல்கள், ஹர்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் தவித்திருப்பதால், இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்தது. இந்த நிலையில்தான் இந்திய கப்பல்களை ஈரான் அனுமதித்திருப்பதாக ராய்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஈரான் தரப்பில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. எனவே உண்மையில் கப்பல்களுக்கு அனுமதி கிடைத்ததா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஒருவேளை அனுமதி கிடைத்தால், இந்த இரண்டு கப்பல்களும் மங்களுர் அல்லது கொச்சிக்கு வரும். அங்கு எரிபொருளை விநியோகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/indian-lpg-carriers-get-green-signal-from-iran-to-sail-through-strait-of-hormuz-781139.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
